search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்"

    • சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அதன்படி, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ரவிச் சந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிக்கும், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சிங்காரப்பேட்டைக்கும், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் எஸ்.ரவி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசேகர், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சி.குமரன், சேலம் மாவட்டம் கருமலைக் கூடல் போலீஸ் நிலையத் திற்கும், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியம், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி போலீஸ் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய இன்ஸ் பெக்டர் ஜாபர் உசேன், ராயக் கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பி.செல்வ ராஜூ, நாமக்கல் மாவட்டம் வேலக வுண்டம்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், சேலம் மாவட்டம் கருமலைக் கூடல் இன்ஸ்பெக்டர் சுகுமார், பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி, குமாரபாளை யத்திற்கும், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார், கிருஷ்ணகிரி நக்சலைட் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பிறப்பித்து உள்ளார். 

    ×